Wednesday, 26 August 2015

 குண சித்திரம்  2016 

மனிதன் பிறக்கும் போதும் ,பின்னர் இறக்கும்   போதும் தனக்கு  தெரிந்த 
நிலையில்  இரண்டுமே  இடம்பெறுவதில்லை ,என்பதை ,தானாக ,எவரும் 
அறியாவிட்டாலும் ,பிறருக்கு ,நேரும் போது  காண்பதன் மூலம் ,தனக்கு 
எப்படி , அமைத்திருக்கும் ,என்பதை உணர்ந்து கொள்ளக்கூடியதே .எல்லோரையும் ,போலவே ,என்தாயார்  என்னையும் பத்துமாதங்கள் வரை 
வயிற்றில் ,தாங்கி ,காத்து , என்முகத்தை தன்  பார்வையில் பார்த்து ,எத்துணை  கொள்ளை இன்பமும் , அன்பும் ,கொட்டி அணைத்து ,மகிழ்ச்சியில் 
 அத்தனை  பிரசவவேதனை களையும் மறந்து ,எனக்கு முலை  அருந்த கண்டு 
மகிழ்ந்திருப்பாள் ,என்பதை , தாய்மையின் ,சிகரத்தை , ஒவ்வொரு மனிதனும் 
அடைந்திருப்பார்கள் . தாய்க்கும் குழந்தை க்கும்   அந்த முதல் நாள் ,வாழ்கையின் திருநாள் . அண்மையில்  அமரத்துவம் எய்திய ,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ,ஏ .பி .ஜே .அப்துல் கலாம் அவர்கள் ,பிறந்த நாள் 
 ஏன் கொண்டாட படுகிறது ,என்று கேட்டபோது ,"அந்த நாள் ஒருவர்  ,தன்  தாயின் வயிற்றில் இருந்து ,பிறந்ததும் முதலில் அழும் குரல் கேட்டு ,தாயின் 
உள்ளம்  சிரித்த நாள் . என்பது தான் , "பிறந்த நாள் ", என்று கொண்டாடப்-
படுகிறது ,என்று கூறினார் ! அதே ,போன்று ,ஒவ்வொரு மனிதரின்  பிறந்த 
நாளும்  அமைகிறது போலும் !
11.2.1941 ல் , ஐந்தாம் வயதில் , தமிழ் நெடுங்கணக்கு ,எண்  கணிதம் , என 
புகட்டிய ,ஆசிரிய  பெருமக்களை ,இந்நாளிலும் ,நினைத்து பார்க்கிறேன் .
பாடசாலை தொடங்க ,முன்னர் ,அன்று ஆத்தி சூடி ,கொன்றைவேந்தன் ,
நல்வழி ,நீதி வாக்கியங்கள்  ஓதிய பின்னரே  படிப்பு தொடங்கும் .முதலில் ,
மாணவர் ,தினவரவு  ஏடு  பதியப்படும் .அப்போது பெயர் கூறி ,கூபிடுகையில் ,
பெயருக்குரிய மாணவர் ,"குணரத்தினம் வந்தேன் வாத்தியார் ",என்ற வாறு 
அனைவரை யும் பதிவது கடமையாகும் .

Tuesday, 25 August 2015

My Life within & out

கால நதியின்  பாய்ச்சல் ..........
 அறியா மறை போல  ,மறையா  அறிவைப்போல  ,தெரியா , ஊருக்கு ,வழி
  செல்லும் ,பயணம் ,போன்றதே  ,மனித வாழ்க்கை , என்று ,சில நேரங்களில்
என்னுள் ,எண்ணம் எழுவதுண்டு . உயிர்களின் தோற்றம் ,இந்த ,உலகம்
தோன்றி ,மறைந்த ,எண்ணற்ற வகையான மிருகங்கள் ,மரம் ,கொடி , பறவை
என ,எத்தனை  ,எத்தனை ,வகை ,இன்று  அறிய  முடியாமல் அழிந்துள்ளன .
ஏன் ,இன்றும்  ,நடப்பதை கூர்ந்து கவனித்தால் , குறிப்பாக ,மனித வர்க்கம்
வாழ்க்கை  ,அதன் இயற்கை .பற்றி ,அறிந்தும் ,உணரவில்லை ,என்று கூறி -
விடலாம் !தன்னை ,தனது உயிரை ,உடல் கூற்றை ,நிலையாமை ,என
மனிதன் ,புரிந்து கொள்ளவில்லை ,என்று எண்ண  வேண்டி  தோன்றுகிறது !
உலகில் ,இன்று ,எங்கு பார்க்கினும் ,ஒரு வித அவசரம் ,அறியாமை ,கோபம் ,
பொறாமை , போட்டி ,அமைதியின்மை ,பொய் , பேராசை ,அல்லவா ,ஆட்சி
புரிகிறது !

ஏன்  பிறந்தோம் ?
எதனையும் ,எண்ணி ,அதன் காரணத்தை ,தெரிந்து கொள்ள மனிதன் மட்டுமே
முயலுகிறான் ; முயற்சி செய்கிறான் . மனிதன் ,உலகின் ,தோற்றம் ,முழு
அண்டம் ,கோள்கள் ,அறியா பால் வெளி ,அங்கு தங்கும் ,பல கோடி விண்  -
மீன்கள் , இன்னும்  கிரகங்கள் ,யாவும் எப்படி ,யாரால் தோன்றின ,தோற்றிவித்தவர் யார் ,ஒருவர் ஆயின் ,அவரை தோற்றிவித்தவர்  யார் ,என்றெல்லாம் ,மனிதனால் ,எழுப்பப்படும் ,கேள்விகள் ; ஆயினும் இவற்றுக்கு இதுவரை   எவராலும் பதில் ,சான்று என ,அறியமுடியவில்லை .இயற்கை ,
மதம் ,மத எதிர்ப்பு , என  பல கொள்கை கள்  கோட்பாடுகள் ,எழுத்தாலும் பேச்சாலும் , முன் ம் வைக்கப்பட்டாலும் ,எவற்றாலும் ,முழுமையான  ,விடை
கூறமுடியவில்லை ! உயிர்கள் யாவும் , வாழ்ந்து மடிவது தான் இதுவரை
கண்ட  உண்மை !இதற்காக ,பிறந்து ,வளர்ந்து ,வாழ்ந்து ,மறைவது ஒன்று மட்டும் ,என்றால் ,அனைத்துக்கும் ,இது பொது விதியா ,அல்லது ,பிறந்து
வாழும் மனிதனுக்கு  இதனை தாண்டியும் சிறப்பாக ,கடமை பொறுப்பு ,
என உண்டா ,என்ற கேள்வி எழுகிறது ! மற்றைய உயிர்களை விட  ,மனிதன்
தன்னை பற்றி ,தான்  வாழும் உலகம் ,உயிர்கள் ,இயற்கை , பற்றி அறியும்
வழிகளை  கண்டறிந்து கொண்ட  ஓர் ஒப்பற்ற  பிறவியாக  கருதப்படுகிறான் .
அந்த வகையில் ,மனிதன் ,மற்ற ஏனைய  உயிர்கள் அனைத்தில் இருந்தும்
வேறு பட்டு  நிற்கிறான் ! தொடக்க காலத்தில் ,விலங்குகளை  போன்று ,
வாழ்ந்த  அவன் ,தனது ,திருந்திய  முறையால் ,விலங்குகளில் இருந்து  வேறுபட்டு ,வாழ அறிந்து கொண்டான் , பின்னர் ,தொடர்ந்தும் ,திருந்தா
வாழ்வில் ,உண்பதும் உறங்குவதும் ,இனப்  பெருக்கமும் மட்டுமே அனுபவிக்க , மனிதன்  அவற்றைக் கொண்டு ,தனக்கு பயன் பெற அறிந்து
கொண்டான் ; பின்னர் ,தனது ,மனித உறவுகளையும்  ,முடிந்த வரை ,பலம்
கொண்டு ,அடக்கி ஆள , தொடங்கி  பின்னர் , அடிமைகளைப் போல ,மனிதன்
மாறி ,ஆண்டான் -அடிமை , அறிமுகம் உருவாக்கி , அதனை  ,சமுகம் ,நாடு
தாண்டி ,உலகம் ,என ஆதிக்கம் செய்தான் ! இன்றைய உலக ,போக்கு ,இந்த
போக்கு , இறுதியில் , போட்டி ,மோதல் , என விரிந்திருப்பதும் ,இதற்கு ,தேவை ,தனிமனித ,விடுதலை , எல்லா வகைத் தளை  களையும் விலக்கி  சுய
சிந்தனையுடன் ,வாழ வேண்டும் .



Tuesday, 24 April 2012

Tuesday, 9 November 2010

காலம் எழுதிச் சென்ற கோலங்கள் -2

அன்று ,ஆரம்பப் பாடசாலை சென்ற ,நான் ,அங்கு ,என்னையும் ,ஏனைய
சிறார்களையும் ,அன்புடன் ,அரவணைத்து ,தமிழ் மொழி யை ,முதன் ,முதல்
புகட்டிய ,ஞானம்மா டீச்சர் ,என்றும் என் ,நினைவில் நிலைத்து ,வாழ்கிறார் ;
அவரைப்போல ,அடுத்து ,புதுவாத்தியர்,அண்மையில், தனது எண்பதாவது,
கடந்து,மறைந்த ஆசிரிய மணி ,பண்டிதர் ,சதாசிவம் ,அவர்களின் ,தமிழ்
மொழி ,புகட்டலும் ,எம்மால் ,என்றுமே ,மறக்கமுடியவில்லை!கதை கூறி ,
தமிழ் வளர்த்தவர் ; என்றும் ,எமது ,தமிழ் ஆவலுக்கு தளம் அமைத்தவர்களில் ,
முதன்மையானவர்!காந்தி மகான் ,சுட்டப்பட ,அன்று ,அந்த செய்தியை ,எனக்கு ,
முதலில் ,வீதியில் ,கண்டவுடன் ,தனது துவிச்சகர வண்டியிலிருந்து ,இறங்கி,
தனது வண்டியில் ,கறுப்பு,கொடி யுடன் ,"காந்தி மகான் சுடப்பட்டார் !", என்ற
செய்தியை ,அறிவித்தவர்!அன்று ,வீதிகள் தோறும் ,யாழ்நகர் ,முதல் ,கிராமங்கள்
வரை ,கறுப்புக்கொடிகள் பறக்கவிட்டார்கள் ,சோக கீதங்கள் வானொலி ,இசை
தட்டு மூலம் ,"கருணா மூர்த்தி காந்தி மகாத்மா, நம் மகாத்மா!"காந்தியை போல்
ஒரு சாந்த மூர்த்தியை காண்பதும் அரிதாமே!"போன்ற , பாடல் பலவும் ,
முழங்க கேட்டது ,என் ,நினைவில் ,அறுபதாண்டு ,கடந்த ,நிலையிலும் ,
இன்றும் ,உள்ள ஒன்று! அன்று ,பாடசாலை செல்லாத ,பிள்ளைகளை , வீடு
சென்று ,அழைத்து போவது ,ஆசிரியர் ,கடமை போன்று .காணப்பட்டதும் ,
பாடசாலை சென்று வர ,மறுக்கும் மாணவர்களுக்கு ,பிரம்படி ,கிடைப்பது
கிடைக்கும்! இரண்டாவது ,உலக ,யுத்தம் ,நடந்த ,அந்த நாட்களில் ,ஆங்கில ,
அரசு ,பாடசாலைகளில் ,மதிய உணவு ,தேநீர் ,வழங்கியது !சோறும் ,கறியும் ,
பின்னர், பாண் ,பால் ,பணிஸ் ,எனவும் ,வழங்கினர் .ஐம்பதாம் ,ஆண்டு ,தை ,
முதல், ஆங்கில கல்வி ,கற்க ,எனது ,குறிப்பாக ,எனது ,தாயாரின் ,அரும்
முயற்சியினால் ,கோப்பாய் ,கிறிஸ்டியன் கல்லூரியில் ,முதலாம் பாரத்தில் ,
"சி " யில் , அனுமதி பெற்றோம் .அன்று ,கல்லுரிகளில் ,இடம் ,பெறுவது ,
எம்மை போன்ற ,வறிய குடும்பங்களில் இருந்து ,வருபவர் படும் துயர்
எத்தகையது ,என்பதும் ,பின்னர் ,பணம் ,செலுத்துவதில் உள்ள ,கஷ்டமும் ,
நான் ,நன்கு ,பட்டறிந்த ஒன்று! (கோலம் இடப்படும் )

காலம் எழுதிசென்ற கோலங்கள் -1

நாம் ,இதுவரை ,பிறந்து ,அறிவறிந்த நாள் முதல் ,கண்டு ,பழகிய ,உறவு ,நட்பு ,
என்ற வட்டத்துள் ,பெற்றோர் ,கூடப் பிறந்தவர் ,கூடிப் பழகிய தோழர்கள் ,
உறவின் முறையினர் ,என்று,அடையாளம் கண்டு ,எம்மீது ,அன்பு கொண்ட பலர் ,
பள்ளி ,கல்லூரித் தோழர்கள் ,ஊரில் வாழ்ந்த மனிதர்கள் ,குறிப்பாக ,என்றும் ,
நினைவில் நிற்கும் ஆசிரிய பெருமக்கள் ,என்று ,எமது வாழ்கையில் ,இடம் பெற்று ,எம்மீது ,எத்தகைய ,செல்வாக்கை ,கொண்டிருந்தார்கள் ,என்பதை ,
பருவங்கள் ,தாண்டிய ,முதுமை அடைந்தாலும், நினைவில் நிற்கும் ,என்பதை ,
அணைவருமே நாம் ,அறிவோம் ! அன்று ,1941,ல் ,எனது ,ஐந்தாம் ,அகவையில்,
எனது ,அழகிய ,சிறிய ,இருபாலை ,ஊரின், ஒரே ,தமிழ் ,கலவன் ,கிறிஸ்தவ ,
பாடசாலயில் ,இணைந்து கொண்டேன் ! அந்நாளில் ,பாடசாலைக்கு ,செல்வது
மிகுந்த பயங்கரமாகவே ,எம்போன்றவர்களுக்கு ,அன்று அச்சம் ,தந்ததற்கு ,
சில சட்டம்பி மார்களின் ,பிரம்படி தான் ,கரணம்!

Saturday, 6 November 2010

வாழ்கை ஒரு நாடகமா?

உயிரின் தோற்றம்,மனிதனின் வளர்ச்சி,ஏனைய சீவர்கள் ,இயற்கை ,அண்டம் ,
அதுக்கப்பால்,அதனையும் ,தாண்டிய ,அறியமுடியாத ,அமைப்பு ,என எல்லா -
அறிந்த ,அறிய முடியாத ,பல,விசித்திர ,சூழலின் பின்னணியில் ,இருப்பும்
உயிர் வாழ்வும் ஏன்,என்ன,என்பதை ,தமக்குள் எண்ணி ,வியக்காத மனிதன்
இருக்க முடியாது !மனித உடல் ,மனித மனம் ,இதயம் ,மனிதனின் உணர்வுகள் ,
லேனோர்ட் வூல்ப் ,என்ற ,எழுத்தாளர்,அறிஞர் ,என்பவர் ,கூறுவதுபோல
"நான் இல்லாமையில் இருந்து ,பிறந்தேன் ,ஈற்றில் ,இல்லாமைகுள்ளேயே
மறைந்து ,விடுவேன் !",எனக்கு நான் மட்டும் தான் !",என்பது ,சிந்திக்கவைக்கும்
ஒன்று! "வாழுவது ,கணமும் அறியாத ,மனித மனம், எண்ணுவதோ ,கோடிக்கும்
அதிகம்!", என்ற ,வள்ளுவர் ,கூற்றும் ,மனங்கொள்ள தக்கது!

Wednesday, 25 February 2009

The Easy way to Happy Life

Every human mind is selecting its own path for a life that is well rooted of its own,irrespective
of whether it is feasible or not,whether it is of good natured or not,whether it become a
burden itself,and costed and caused much sufferings and at last it ends in vain.It is oftenly
asked in class rooms and in public as well as in private, at children and youngsters of their
future aim in Life.In most cases,it is well known that the answer would be of becoming
as doctor,engineer,teacher,pilot and so on according to each of their inner feeling or of
each one's aspiration .Even,there are a few one whose ideas and inspirations are to be
engaged to help or serve others.Some even wanted to refrain from doing harm or to hurt
others even with harsh words.such personalities, always against inflicting sufferings to
fellow human and also to other living things.Now it is seen,everywhere violence let loosened
and innocent human sufferings at its full swings!To inflict heavy loss of lives both by detrimental
forces and hired persons are witnessed all over the world.These are ,because of lost of love
and passion for human beings.